தமிழக செய்திகள்

பெண்ணுக்கு அரிவாள்மனை வெட்டு

நெல்லிக்குப்பம் அருகே பெண்ணுக்கு அரிவாள்மனை வெட்டு கணவர் கைது

தினத்தந்தி

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் அருகே உள்ள எழுமேடு அகரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 57). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அம்பிகா(42). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அம்பிகா, கடந்த 3 ஆண்டாக பில்லாலித்தொட்டியில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடேசன், அம்பிகா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் வீட்டில் இருந்த அரிவாள்மனையால் அம்பிகாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அம்பிகா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு