தமிழக செய்திகள்

எலி தலை இருந்த புகார் எதிரொலி: ஆரணி சைவ ஓட்டலுக்கு சீல்..!

ஆரணியில் உள்ள சைவ ஓட்டல் ஒன்றில் உணவில் எலி தலை இருந்த புகாரின் எதிரொலியாக ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

தினத்தந்தி

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சைவ ஓட்டல் ஒன்று செயல் பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஓட்டலில் வீட்டு விசேசத்திற்கு உணவு வாங்கி சென்றுள்ளனர். அப்போது வாடிக்கையாளர் ஒருவர் வாங்கி சென்ற உணவுப் பார்சலில் பீட்ரூட் பொரியலில் எலித்தலை இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) இரவு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு த்துறை அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர் ஓட்டலுக்கு சீல் வைத்தனர். மறு உத்தரவு வரும் வரை ஓட்டலை திறக்கக்கூடாது என உணவுப் பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு