தமிழக செய்திகள்

சுரண்டை, சேர்ந்தமரத்தில் 2 நகை அடகு கடைகளுக்கு சீல் வைப்பு

சுரண்டை, சேர்ந்தமரத்தில் 2 நகை அடகு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

தினத்தந்தி

சுரண்டை:

டெபாசிட்டுக்கு அதிக வட்டி மற்றும் வட்டியில்லாத நகைக்கடன் என்று கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சுரண்டை மற்றும் சேர்ந்தமரத்தில் நகை அடகுக்கடை நடத்தி வரும் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்த நகை அடகு கடைகளுக்கு சென்று சோதனையிட்டு 'சீல்' வைத்தனர். பின்னர் அதன் உரிமையாளரை விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றனர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா