தமிழக செய்திகள்

காவலாளி தற்கொலை

பெரியநாயக்கன்பாளையம் அருகே வடமாநில காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெ.நா.பாளையம்

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ்குமார் ராம் (வயது 25). இவர் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கியிருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பங்கஜ்குமார் தனது சொந்த ஊரில் ஒருபெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.

ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் அவரை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பங்கஜ்குமார் ராம், தான் தங்கியிருந்த தோட்ட வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்