தமிழக செய்திகள்

அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடிப்பு-கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு

கிராமசபை கூட்டத்தில் அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

செங்கம்

கிராமசபை கூட்டத்தில் அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அல்லியந்தல் ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பார்வைக்கு எந்த ஆவணங்கள் காண்பிக்காமல், பொதுமக்களின் கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் கோரிக்கை மனுக்கள் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படததால் அதனை கண்டித்து பொதுமக்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாய்ச்சல் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு