தமிழக செய்திகள்

கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மண்டல உதவி புவியாளர் நாகராஜனுக்கு அரசு அனுமதி இல்லாமல் கூழாங்கற்களை லாரியில் கடத்துவதாக கிடைத்த ரகசியதகவலின்படி நாகராஜன் தலைமையிலான பறக்கும் படையினர் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்-விருத்தாச்சலம் சாலையில் அரசு மருத்துவமனை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எவ்வித அனுமதியும் இல்லாமல் சுமார் 3 யூனிட் அளவுள்ள கூழாங்கற்களை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவரை பிடித்து விசாரித்ததில் அவர் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா, நரியப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயவேல்(வயது 24) என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து மண்டல உதவி புவியாளர் நாகராஜன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் போலீசார் கூழாங்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து லாரி டிரைவர் சேகர் மகன் ஜெயவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்