தமிழக செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வந்தவாசியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வந்தவாசி

வந்தவாசியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் பஜார் வீதியில் சோதனை நடத்தினர். அப்போது சீதாராமஅய்யர் தெருவில் ஒரு மொத்த வியாபாரி கடையில் 210 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அந்த கடைக்கு அபராதம் விதித்தனர்.

இதேபோல் வந்தவாசி நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை செய்து 500 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் ஆகும்.

ஆய்வின்போது நகராட்சி மேலாளர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், சுகாதார மேற்பார்வையாளர் லோகநாதன், நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்