தமிழக செய்திகள்

கிராவல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கிராவல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

ஆலங்குடி அருகே உருமநாதபுரம் பகுதியில் டிராக்டரில் கிராவல் மண் கடத்தப்படுவதாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், ஆலங்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை போலீசார் மறித்தனர். போலீசார் நிற்பதை பார்த்த டிரைவர் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து போலீசார் டிராக்டரை பரிசோதனை செய்தபோது, அதில் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பதிவு எண் இல்லாத டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடிய தெற்கு செட்டியாபட்டியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு