தமிழக செய்திகள்

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.பர்கூர்:-

கிருஷ்ணகிரி கனிம வள துறை உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் பர்கூர் அருகே ஜெகதேவி சாலையில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் நின்ற லாரியை சோதனை செய்த போது அதில் 28 டன் அளவுக்கு கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்து சென்றது தெரிய வந்தது. விசாரணையில் அந்த கற்கள் ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து ஜெகதேவிக்கு கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரி பொன்னுமணி கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் கிரானைட் கற்களையும், லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்