தமிழக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை; டிரைவர் கைது

நெல்லை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை அருகே சீவலப்பேரி பொட்டல்நகரை சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மகன் மகேஷ் (வயது 30). லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் சீவலப்பேரி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT