தமிழக செய்திகள்

என்ஜினீயரிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: மருத்துவ கல்லூரி மாணவர் கைது

ஆவடி அருகே என்ஜினீயரிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவ கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது 21). இவர், சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் 25 வயதான மாணவியுடன் பழகினார்.

அப்போது மாணவியை மிரட்டி இயற்கைக்கு மாறாக அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து என்ஜினீயரிங் மாணவி அளித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து