தமிழக செய்திகள்

கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற தம்பதி - அதிர்ச்சி சம்பவம்

கடலூரில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை அடித்துக் கொன்ற கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கடலூர்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வசிஸ்டபுரம் பகுதியைச் சேர்ந்த மலர் என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரியிடம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பது லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். ஆனால் கடனை ராஜேஸ்வரி திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இது தொடர்பாக திட்டக்குடி காவல்நிலையத்திலும் மலர் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், ராஜேஸ்வரியின் வீட்டிற்கு சென்று மலர் பணத்தை கேட்டுள்ளார். அப்போது பணத்தை தர மறுத்து ராஜேஸ்வரியும் அவரது கணவர் முருகனும் மலரை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த மலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவன்-மனைவியை கைது செய்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்