தமிழக செய்திகள்

கும்பகோணத்தில் கடைகள் அடைப்பு

கும்பகோணத்தில் கடைகள் அடைப்பு

தினத்தந்தி

ஆண்டுதோறும் மே 5-ந்தேதி வணிகர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஈரோட்டில் வணிகர் சங்க மாநாடு நடைபெற்றது. இதனையொட்டி கும்பகோணத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் நேற்று மதியம் 1 மணி வரை வியாபாரிகள் அடைத்து வணிகர் சங்க மாநாட்டுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனால் கும்பகோணம் பெரிய தெரு பெரிய கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் பாபநாசம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கடைவீதி, தெற்கு ராஜவீதி, கீழவீதி, சின்ன கடை தெரு, திருப்பாலைத்துறை, சன்னதி தெரு, வங்காரம் பேட்டை, 108 சிவாலயம், தஞ்சை மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் அனைத்து வணிகர்களும் கடைகளை அடைத்திருந்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு