தமிழக செய்திகள்

2 பேருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

தினத்தந்தி

பாளையங்கோட்டை சாவடி தெருவைச் சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன் (வயது 51), கணேசன் (54). இவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே நேற்று நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், பாலசுப்பிரமணியன், கணேசன் ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்