தமிழக செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா வருகிற 8-ந் தேதி நடக்கிறது.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் புகழ் பெற்ற பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 8-ந் தேதி வரை தெப்பத்திருவிழா நடக்கிறது. இதனை தொடர்ந்து 9, 10 ஆகிய தேதிகளில் தவன திருவிழாவும், 11-ந்தேதி தவன சாற்றுமுறை திருவிழாவும் 12-ந்தேதி தாயார் தவன திருவிழாவும், 13-ந்தேதி ஆண்டாள் தவன திருவிழாவும் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் பாஸ்கரன், நிர்வாக அதிகாரி க.வெங்கடேசன், மேலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்