தமிழக செய்திகள்

சிறுவாபுரி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.48 லட்சம்

சிறுவாபுரி முருகன் கோயில் உண்டியலில் ரூ.48 லட்சம் காணிக்கை வசூலாகியுள்ளது.

தினத்தந்தி

சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் தொகை என்னும் பணி நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, சிறுவாபுரி முருகன் கோவிலின் செயல் அலுவலர் பிரகாஷ் மேற்பார்வையில் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இப்பணி நடைபெற்றது. இதில், ரொக்கம்பணம் ரூ.48 லட்சத்து 62 ஆயிரத்து 109-ம், 54 கிராம் 690 மில்லி கிராம் தங்கம், 3 கிலோ 780 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக கிடைக்கப்பெற்றது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து