தமிழக செய்திகள்

சிவகங்கை கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டில் மறுவாக்கு எண்ணிக்கை - ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு

சிவகங்கை கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

மதுரை,

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் முறைகேடாக வெற்றி பெற்றதாகக் கூறி திமுக வேட்பாளர் சரஸ்வதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் மோகன்குமாரை நீதிமன்ற ஆணையராக நியமித்து, அவரது முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும், மறுவாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யவும், ஏப்ரல் 11-ல் அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்