தமிழக செய்திகள்

அரசு பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி

அரசு பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

தினத்தந்தி

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேன்மொழி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமாவதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சாகுல் அமீது வரவேற்று பேசினார். கண்காட்சியில் கம்பு, சோளம், ராகி, குதிரைவாலி, வரகு, சாமை, தினை ஆகியவற்றைக் கொண்டு சுமார் 160 படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர். இதனை அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கண்டுகளித்தனர். முடிவில் கணித பட்டதாரி ஆசிரியர் ஷகிலாபானு நன்றி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து