தமிழக செய்திகள்

அரசு பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி

அரசு பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி நடைபெற்றது.

தினத்தந்தி

தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் தங்கள் வீடுகளில் சமைத்த உணவுகளை காட்சிப்படுத்தி இருந்தனர். இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கண்காட்சியை தரகம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் வேதவள்ளி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

கடவூர் ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் கலந்து கொண்டு, கண்காட்சியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார். இதில், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து