தமிழக செய்திகள்

வீட்டுக்குள் புகுந்த பாம்பு

வீட்டுக்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

திருவாரூர்:-

திருவாரூர் அருகே உள்ள அலிவலம் பகுதியை சேர்ந்தவர் செல்வகணபதி. இவர் திருவாரூர் விஜயபுரம் கடைத்தெருவில் கெடிகாரம் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவருடைய வீட்டில் 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடிவந்தனர். இதுகுறித்து திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டுக்குள் மின் மீட்டர் பெட்டிக்குள் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

லஞ்சம் வாங்கும்போது கைது... குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

காஷ்மீர் என்கவுன்ட்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்

நாளை மத்திய பட்ஜெட் - தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் கைது