தமிழக செய்திகள்

காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் அதிரடி கைது கற்பழிப்பு வழக்கில் போலீசார் நடவடிக்கை

காணாமல்போய் கண்டுபிடித்து மீட்கப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்கில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சென்னை,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய வீடியோவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி சமூக ஆர்வலர் முகிலன் வெளியிட்டார்.

அன்றைய தினம் இரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ரெயிலில் சென்றபோது முகிலன் மாயமானார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.