தமிழக செய்திகள்

சிறப்பு கிராமசபை கூட்டம்

துத்திப்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சிமன்ற தலைவர் சுவிதாகணேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விஜய் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

வட்டார அலுவலர் சுதா கலந்து கொண்டு 100 வேலை திட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் 100 வேலை திட்ட பணியாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

SCROLL FOR NEXT