தமிழக செய்திகள்

திண்டிவனத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம்

திண்டிவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா தலைமை தாங்கினார். தாசில்தார்கள் திண்டிவனம் கிருஷ்ணதாஸ், மரக்காணம் பாலமுருகன் (பொறுப்பு), சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமிற்கு வந்திருந்த 250 மாற்றுத்திறனாளிகள், இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன், 3 சக்கர வாகனம் வழங்க வேண்டும், அரசின் உதவித் தொகை உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

இதில் மாற்றுத்திறனாளிகள் 21-பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் வகையில், பெரியதச்சூர் பகுதியில் இடம் தேர்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து