தமிழக செய்திகள்

நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்த சிறப்பு இயக்கம் தொடக்க விழா

வாணாபுரம் ஊராட்சியில் நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்த சிறப்பு இயக்கம் தொடக்க விழா

தினத்தந்தி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாணாபுரம் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பருவமழைக்கு முன் நீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு இயக்கம் அடுத்த மாதம்(ஜூன்) 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கான தொடக்க விழாவுக்கு வாணாபுரம் ஊராட்சி தலைவர் தீபா அய்யனார் தலைமை தாங்கினார். துணை தலைவர் வசந்தி ராஜா வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி நீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்