சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை விடுமுறையையொட்டி பயணிகள் வசதிக்காக திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, திருச்சியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.45 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-06192) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.