தமிழக செய்திகள்

திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மங்களூரு சென்டிரலில் இருந்து பாட்னாவிற்கு சிறப்பு ரெயில்

மங்களூரு சென்டிரல் - பாட்னா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் வரும் 4-ந்தேதி மங்களூரு சென்டிரல் - பாட்னா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம் மங்களூரு சென்டிரலில் இருந்து வரும் 4-ந்தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில்(வண்டி எண்.03244) புறப்பட்டதில் இருந்து 4-வது நாள் காலை 5.30 மணிக்கு பாட்னா சென்றடையும். இந்த ரெயிலானது மங்களூரு சென்டிரலில் இருந்து போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் பெரம்பூர் வழியாக பாட்னா செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்