சென்னை
இலங்கை நெடுந்தீவு கரைப்பகுதிக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் ஜேசு அலங்காரம் என்ற 56 வயதான மீனவர் கண்ணில் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துப்பாக்கி தோட்டா துகள்கள் அவரின் வலது கண்ணில் இருப்பதால் அவர் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.