தமிழக செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வை 1,440 பேர் எழுதினர்

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வை 1,440 பேர் எழுதினர்

தினத்தந்தி

விழுப்புரம்

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 19-ந் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு துணைத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 4 மையங்களிலும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 7 மையங்களிலும் என 11 தேர்வு மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு நடைபெற்றது. நேற்று நடந்த தமிழ் தேர்வை எழுத 1,164 மாணவர்களும், 453 மாணவிகளும் என மொத்தம் 1,617 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 1,053 மாணவர்களும், 387 மாணவிகளும் என மொத்தம் 1,440 பேர் கலந்துகொண்டு துணைத்தேர்வை எழுதினர். 177 பேர் தேர்வு எழுத வரவில்லை.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து