தமிழக செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை கர்ப்பமாக்கிய 2 மாணவர்கள் மீது வழக்கு

திருவள்ளூரில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை கர்ப்பமாக்கிய 2 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி. பயின்று வருகிறார். இவரை அதே பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் கடந்த ஜனவரி மாதம் வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து உள்ளனர். தற்போது அந்த மாணவி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார் என்று கூறப்படுகிறது. இது பற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுது புலம்பி உள்ளார். இது குறித்து அந்த மாணவியின் தாயார் திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது சம்பந்தமாக போலீசார் 2 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்