தமிழக செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 துணைத்தேர்வு 21-ந் தேதி தொடங்குகிறது - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 துணைத்தேர்வு 21-ந் தேதி தொடங்க இருப்பதையடுத்து, தேர்வு மையங்களில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான துணைத்தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடங்க இருக்கிறது. இதில் எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு அடுத்த மாதம் 21-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரையிலும், பிளஸ்-1 துணைத்தேர்வு அடுத்த மாதம் 29-ந் தேதி முதல் அக்டோபர் 7-ந் தேதி வரையிலும், பிளஸ்-2 துணைத்தேர்வு அடுத்த மாதம் 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வுக்கு தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்வு மையங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். தேர்வு எழுதும் மையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், வேறு மாவட்டத்தில் இருந்து பயணம் செய்து வரும் தேர்வர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்