தமிழக செய்திகள்

அகழாய்வில் கிடைத்த முத்திரையிடும் கருவி

சிவகாசி அருகே அகழாய்வில் கிடைத்த முத்திரையிடும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது.

தினத்தந்தி

தாயில்பட்டி, 

சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் நேற்று முத்திரையிட பயன்படுத்திய கருவி கண்டுபிடிக்கப்பட்டது. முன்னோர்கள் பண்டைய காலத்தில் முத்திரையிடும் பழக்கத்தை கடைப்பிடித்துள்ளனர் என்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் ஆங்கிலேயர் காலத்தில் தபால் துறையில் முத்திரை பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பாகவே சுடு மண்ணால் செய்யப்பட்ட முத்திரையிடும் கருவியை நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர். எந்தெந்த வகையில் இக்கருவியை பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்விற்கு பிறகு தெரியவரும் என கூறினர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை