கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம், நீர்வளம் மாசடைந்துள்ளது: சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கை

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம், நீர்வளம் மாசடைந்துள்ளது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த குழுவானது தற்போது பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம், நீர்வளம் மாசடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கழிவுகளை கையாண்ட முறைகளில் பல்வேறு தவறுகள் உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தமிழக அரசுக்கு விளக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது