தமிழக செய்திகள்

'சந்திரயான்-3' வெற்றியை பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உறுதி

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி என்பது நமது நாட்டின் பெருமை என்று அமைச்சர் அன்பில்மகேஷ் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

'சந்திரயான்-3' வெற்றியை பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி என்பது நமது நாட்டின் பெருமை என்றும், இந்த திட்டத்தில் பணியாற்றியவர்கள் நமது அரசு பள்ளிகளில் படித்தவர்கள் என்பது கூடுதல் பெருமை என்றும் கூறினார்.

'சந்திரயான்-3' திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்