தமிழக செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு கொள்கை முடிவு எடுத்து நிரந்தரமாக மூட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை,

அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் மூடப்பட்டு கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடுமாறு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-