தமிழக செய்திகள்

புள்ளிமானை கடித்து கொன்ற தெருநாய்கள்

புள்ளிமானை தெருநாய்கள் கடித்து கொன்றன.

தினத்தந்தி

தா.பேட்டை:

தா.பேட்டை அருகே உள்ள நீலியாம்பட்டி கிராம விவசாய பகுதிக்கு தொட்டியம் அருகே உள்ள முள்ளிப்பாடி வனப்பகுதியில் இருந்து சுமார் 3 வயதுள்ள புள்ளிமான் ஒன்று வழி தவறி தண்ணீர் தேடி வந்துள்ளது. அப்போது தெருவில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் திடீரென அந்த மானை துரத்தி சென்று கடித்துள்ளன. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் நாய்களை அங்கிருந்து துரத்திவிட்டு காயமடைந்த மானை மீட்டு தும்பலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த மான் பரிதாபமாக இறந்தது. பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த மானை தும்பலம் வனப்பகுதிக்கு எடுத்துச்சென்று புதைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து