தமிழக செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது.

தினத்தந்தி

விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் குளித்தலையில் வருகிற 7-ந்தேதி போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டதை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குளித்தலை ஒன்றிய குழு சார்பில் நெய்தலூர் காலனி, நங்கவரம், குறிச்சி ஆகிய பகுதிகளில் தெருமுனை பிரசாரம் நடந்தது. இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜூ முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்