தமிழக செய்திகள்

அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடக்கம்

ரிஷிவந்தியம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடங்கியுள்ளது.

ரிஷிவந்தியம், 

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரிஷிவந்தியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று இந்த கல்லூரியில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாணவர் சேர்க்கை உதவி மையம் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இயங்கும். மேலும் 9363462080, 8248497059 ஆகிய செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். இது தவிர www.tngasa.in என்ற இணையதள முகவரி மூலமும் மாணவர்கள் விவரங்களை தெரிவித்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்