தமிழக செய்திகள்

தறி எந்திரத்தில் சிக்கி மாணவர் சாவு

தறி எந்திரத்தில் சிக்கி விபத்துக்குள்ளான மாணவர் இறந்தார்.

தினத்தந்தி

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே வேம்படிதாளம் பகுதி அரியம்பாளையத்தை அடுத்த நரிகுட்டை ரோட்டை சேர்ந்த செந்தில்குமார் மகன் கவுரி (வயது 16). இந்த மாணவன், காக்காபாளையத்தில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்ததாக தெரிகிறது. தறி தொழிலாளியான செந்தில்குமாருக்கு, உதவியாக கவுரி நேற்று தறிபட்டறையில் இருந்ததாக தெரிகிறது.

அப்போது தறி எந்திரத்தில் சிக்கி கவுரி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கவுரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து