சென்னை,
இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சியின் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2021-22 ஆம் ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக தமிழகம் உள்ளது. அரசின் நடவடிக்கையால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.