தமிழக செய்திகள்

டிராக்டர் மோதி மாணவன் பலி

தியாகதுருகம் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் மாணவன் பலியானான்.

தினத்தந்தி

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே உள்ள புதுஉச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 43). இவரது மகன் நேதாஜி(14). இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நேதாஜி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக நேதாஜி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேதாஜி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்