தமிழக செய்திகள்

சுரண்டை பள்ளி மாணவர்கள் சாதனை

ஓவியப் போட்டியில் சுரண்டை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தினத்தந்தி

சுரண்டை:

குளோபல் ஈவன்ட் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவிலான ஓவியப்போட்டி நடந்தது. இதில் சுரண்டை எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் இருந்து வகுப்பு வாரியாக சுமார் 183 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் 13 பேர் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன்நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலாளர் சிவடிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன்மனோன்யா, தலைமை ஆசிரியர் மாரிக்கனி ஆகியோர் பாராட்டினர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்