தமிழக செய்திகள்

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

குடவாசல் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று நடக்கிறது

தினத்தந்தி

குடவாசல்;

குடவாசல் அரசு கல்லூரி முதல்வர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-குடவாசல் எம்.ஜி.ஆர். அரசு கல்லூரியில் இளங்கலை பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம் வணிகவியல், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டிற்கான மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுதாரர் ஆகியோருக்கு கலந்தாய்வு இன்று(புதன்கிழமை) கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. தொடர்ந்து மாணவர்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. 2- வது கட்ட கலந்தாய்வு 13-ந் தேதி நடைபெறுகிறது. மாணவர்கள் இணைய வழி விண்ணப்ப நகல், 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, வகுப்பு சான்று, ஆதார் அட்டை, மாற்றுச்சான்றிதழ் அசல், நகல், புகைப்படம், எடுத்து வரவேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து