தமிழக செய்திகள்

வடமாநில தொழிலாளி திடீர் சாவு

பாணாவரம் அருகே வடமாநில தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.

தினத்தந்தி

பாணாவரம் அருகே மகேந்திரவாடி பகுதியில் சென்னை- பெங்களூரு அதிவிரைவு சாலை பணிகள் நடைபெற்றுவருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம், மோகன்பூர் பகுதியை சேர்ந்த விஜய் ஏம்ராம் (வயது 40) என்பவர் நேற்று முன்தினம் சொந்த ஊரிலிருந்து சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்த பணியாளர்கள் நெமிலி புன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கிருந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு