தமிழக செய்திகள்

ஏற்காடு வனப்பகுதியில் திடீர் காட்டு தீ

தினத்தந்தி

ஏற்காடு:-

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும் பனியின் தாக்கம் குறையாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் ஏற்காட்டில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகலூர் கிராமம் ஜெ.ஜெ நகர் அரசு மாதிரிப்பள்ளி பகுதி வனப்பகுதியில் நேற்று மாலை 3.30 மணியளவில் திடீரென காட்டு தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராடி காட்டு தீயை அணைத்தனர். காட்டு தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்