தமிழக செய்திகள்

திடீரென அறுந்த மின் கம்பி.. சிறுமி மீது பட்ட பயங்கரம் - துடிதுடித்து விழுந்த குழந்தை

மின்கம்பி திடீரென அறுந்து விழுந்த‌தில் சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது.

தினத்தந்தி

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில், 12 வயது சிறுமி மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். குத்தாலம் அருகே கப்பூர் கிராமத்தில், இன்று காலை மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததில் சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது.

தொடர்ந்து, சிறுமியை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கிராம மக்கள் அனுமதித்து உள்ளனர். பழுதடைந்த மின்கம்பிகளை மாற்றுமாறு பலமுறை புகார் அளித்தும், மின்துறை அதிகாரிகளின் அலட்சத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி பரபரப்புடன் கானப்பட்டது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு