தமிழக செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

குருபரப்பள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பி. திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 19). தனியார் நிறுவன ஊழியர். குடும்ப பிரச்சினை காரணமாக இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.