தமிழக செய்திகள்

பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை

நாமக்கல் மாவட்டத்தில் பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனா.

தினத்தந்தி

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு நாமக்கல் மாவட்டம் முழுவதும் பழக்கடைகள், மாம்பழ குடோன்கள், தர்ப்பூசணி விற்பனை கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பழ வகைகளை பழுக்க வைக்க கார்பைட் கற்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர். மாவட்டம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது 4 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் அருண் கூறுகையில், அரசு விதிமுறை மீறும் வணிகர்கள் கண்டறியப்பட்டால் அவர்களின் உணவு பாதுகாப்பு உரிமை ரத்து செய்யப்படும் என்றார். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதியப்படும் என அவர் கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு