தமிழக செய்திகள்

செயற்கை கருத்தரிப்பு மையங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை உத்தரவு

செயற்கை கருத்தரிப்பு மையங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை:

மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருதரிப்பு மையங்கள், வாடகை தாய் மையம் என நான்கு வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாயும், கருப்பையில் செலுத்த 50 ஆயிரம் ரூபாயும், வாடகை தாய் மையத்துக்கு இரண்டு லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

பதிவு கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம் எனவும், இதன் மூலம் போலி கருதரிப்பு மையங்கள் செயல்படாமல் தடுக்க முடியும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்