தமிழக செய்திகள்

தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் - பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு

தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு அளித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. அப்போது, அந்த கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பேரவை செயலாளரிடம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கையொப்பமிட்ட தனிநபர் தீர்மானத்தை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அளித்தனர்.

அந்த கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வர தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்திய போதும், கூட்டத்தொடரில் இந்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துகொள்ளப்படவில்லை.

இந்தநிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 14-ந் தேதி(வெள்ளிக்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று தலைமை செயலகத்தில் பேரவை செயலாளரை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேற்று சந்தித்து மனு அளித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்