தமிழக செய்திகள்

தமிழ்நாட்டிற்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு கனிமொழி எம்.பி பதிலடி

தமிழ்நாட்டிற்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு கனிமொழி எம்.பி பதிலடி கொடுத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டிற்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு கனிமொழி எம்.பி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.

வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது. அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை.

தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை! நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் கவர்னர் ரவி, சிறிது நேரம் அமைதி காக்கவும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை